Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
16/04/2025
in இந்தியா
0
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க வேண்டும் என தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா உள்ளார். இவர் கடந்த நவ.,11 அன்று தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். வரும் மே 13ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.

இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யும்படி சஞ்சீவ் கன்னாவிடம் மத்திய அரசு கூறி இருந்தது. இதனை ஏற்று, மூத்த நீதிபதி பிஆர் கவாய் பெயரை, சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார். மே 14ம் தேதி அன்று கவாய், தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இவர், அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார். நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு பதவியேற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இரண்டாவது நீதிபதி என்ற பெருமை கவாய்க்கு கிடைக்க உள்ளது.

யார் இவர்

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

இவரது முழுப்பெயர் பூஷன் ராமகிருஷ்ணா கவாய் ஆகும். மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 1960 நவ.,24 ல் பிறந்தார்.இவரது தந்தை ஆர்.எஸ் கவாய் இந்திய குடியரசு கட்சி(கவாய்) யின் தலைவராகவும், ம.பி., கவர்னராகவும் பதவி வகித்து உள்ளார்.

பி ஆர் கவாய் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையிலும், மும்பை உயர்நீதிமன்றத்திலும் பயிற்சி பெற்றார். மும்பை உயர்நீதிமன்றத்தின் அட்வகேட் ஜெனரல் ஆகவும், நீதிபதியாகவும் பதவி வகித்த உள்ளார். கூடுதல் அரசு பிளீடர், கூடுதல் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் ஆக மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் பணியாற்றி உள்ளார்.

2003ம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுத்ல் நீதிபதியாகவும், 2005 ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

Tags: Bhushan Ramkrishna GavaiChief JusticeSupreme Court of India
Previous Post

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை 

Next Post

வக்ப் வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved