Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
22/04/2025
in மாவட்டங்கள்
0
செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செங்கம் அருகே பட்டப் பகலில் பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பூ கொள்முதல் செய்து அதனை பெங்களூரு பகுதிக்கு ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள பெட்டிக்கடையை கவனித்து வருகிறார். இதனால் பெரும்பாலும் அவர்கள் வீட்டில் இருப்பதில்லை.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவின் அருகில் இருந்த சாவி மூலம் எந்தவித சிரமமும் இன்றி பீரோவைத் திறந்து உள்ளே இருந்த 30 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சுப்பிரமணியின் மனைவி வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

AlsoRead

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு உள்ளிருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

பின்னர் அக்கம்பக்கத்தினர் மேல்செங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மேல்செங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் 30 சவரன் தங்க நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Chengam News Todaygold jewellery stolentiruvannamalai
Previous Post

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

Next Post

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Related Posts

Kalasapakkam Election Training

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026
Sivakasi Fireworks Accident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

23/03/2026

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

23/03/2026

நிலக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.4.68 லட்சம் பறிமுதல்

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved